News

Thursday, 26 March 2020 12:52 PM , by: Anitha Jegadeesan

மத்திய அரசு கடந்தாண்டு இறுதியில் எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதற்கான நடவடிக்கையை  மேற்கொண்டது. இதன் மூலம் உள்நாட்டு எண்ணெய் வித்துகளுக்கான நிலக்கடலை, சூரியகாந்தி, கடுகு உற்பத்தியை பெருகுவதற்கு ஊக்குவித்தது. இதற்கு முக்கிய காரணம் குறுகிய கால பயிராகவும், குறைந்த பாசன வசதி, மற்றும்  குறைந்த சாகுபடிச் செலவு என்பதே ஆகும்.

கரோனா தாக்கம் காரணமாக அனைத்து நாடுகளும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியினை முற்றிலும் தடை விதித்துள்ளது. நமது நாட்டை பொறுத்தவரை 60 சதவீதம் தாவர எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது. உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதால் எண்ணெயின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு விவசாயிகள் லாபம் தரக்கூடிய எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததே எண்ணெய் வித்துப் பயிர் சாகுபடி குறைந்ததற்கு காரணம் என்கிறார்கள். எனவே தற்போது உருவாகியுள்ள இந்த சூழல் நாட்டையும், தனி மனிதனையும் சுய சார்புடையவர்களாக மாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது எனலாம். 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)