மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 February, 2022 6:09 PM IST
Impact of cowpea yield on substandard seeds

ஆண்டுக்கு ஒருமுறை பனியில் விளையும் காராமணி பயிர் மகசூல் இந்த ஆண்டு 60 சதவீதம் வரை குறைந்ததால் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழக விவசாய முறை பருவத்திற்கு ஏற்ப பயிர் செய்வதில் பாரம்பரிய பெருமை கொண்டது. வடகிழக்கு பருவ மழை முடிந்து, பனிக்காலம் துவங்கும் போது புஞ்சை நிலங்களில் ஈரப்பதம், மிதமான வெயில், பனிப்பொழிவை பயன்படுத்தி எள், உளுந்து, காராமணி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் இந்த மூன்று பயிர்களையும் பனிப்பயிர்கள் என அழைக்கப்படுகிறது. இதில் எள், உளுந்து பயிர் தமிழகம் முழுவதும் சாகுபடி செய்கின்றனர்.

காராமணி பயிர்கள் (Cowpea Crops)

இளஞ்சிவப்பு நிறத்தில், சிறிய ரக காராமணி பயிர்கள் வட தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதியில் மட்டும் விளைகின்றன. இந்த வகை பயிர்கள் வளர தேவையான மண் வளம் இங்கு மட்டுமே உள்ளது. இந்த பயிர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விளையும். இந்த ரக காராமணி பயிர்கள் ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகிறது.

அங்கு தினசரி முக்கிய உணவாக இந்த காராமணி பயிரை பயன்படுத்துகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு 20 ஆயிரம் ஏக்கர் காராமணிசாகுபடி செய்யப்படுகிறது. இதற்கான விதைகளை வேளாண்மைத் துறையினர் வழங்குவதில்லை. தனியார் கடைகளில் கிலோ 130 ரூபாய்க்கு வாங்கி விவசாயிகள் விதைக்கின்றனர். 90 நாட்களில் மகசூல் எடுத்து விடுவார்கள்.

விதைக்கப்பட்ட 15வது நாளில் இருந்து பூச்சிக் கொல்லி, பூஞ்சான கொல்லி, பயிர் ஊக்கி என 5 முதல் 7 முறை மருந்து அடிக்கின்றனர். இதற்காகவும் பயிர் செலவாகவும் ஏக்கருக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர். 7 முதல் 5 மூட்டை (ஒரு மூட்டை 100 கிலோ) வரை மகசூல் கிடைக்கும். மார்க்கெட் கமிட்டியில் 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை இதற்கு விலை கொடுக்கின்றனர்.

மகசூல் பாதிப்பு (Yield Loss)

எனவே, மற்ற பயிரை விட இதில் கூடுதல் லாபம் கிடைக்கும். இந்த ஆண்டு சாகுபடி செய்த பயிர்கள் செழித்து வளர்ந்தன. பூவும் வைத்தது, ஆனால் காய் பிடிக்கவில்லை. மகசூல் ஏக்கருக்கு 2 மூட்டை அளிவிற்கே கிடைத்துள்ளது. 60 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் மகசூல் எடுக்காத விவசாயிகள் காய் பிடிக்க மீண்டும் பயிர் ஊக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

விதைகள் வழங்க கோரிக்கை (Request for seeds)

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'கடைகளில் வாங்கிய விதைகள் தரமற்றவையாக இருக்கலாம் அல்லது மரபணு மாற்றம் செய்த விதையாகவும் இருக்கலாம். மகசூல் குறைய என்ன காரணம் என தெரியவில்லை. வேளாண்மைத் துறையினர் காராமணி பயிர்கள் காய் பிடிக்க எந்த ஆலோசனையும் வழங்கவில்லை. அடுத்த ஆண்டு வேளாண்மைத் துறையினர் காராமணி விதைகளை விரிவாக்க மையங்கள் மூலம் வழங்க வேண்டும். அத்துடன், காராமணி சாகுபடி செய்யும் விவசாயிகளை கண்காணித்து போதிய ஆலோசனை வழங்க வேண்டும்' என்றனர்.

மேலும் படிக்க

வீடுகளில் மீன் வளர்க்க ஆசையா? உதவக் காத்திருக்கிறது பயோ பிளாக் தொழில்நுட்பம்!

மண்வளத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானியம்!

English Summary: Impact of cowpea yield on substandard seeds: Farmers worried!
Published on: 25 February 2022, 06:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now