மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 January, 2023 7:06 AM IST
Pongal Gift

ரேஷன் கடைகளுக்கு, பொங்கல் பரிசில் இடம் பெற்றுள்ள பச்சரிசி, சர்க்கரை, 60 சதவீதம் சப்ளை செய்யப்பட்டு உள்ளது; மீதமுள்ளவை இரு தினங்களில் சப்ளை செய்யப்படும்,'' என, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

பொங்கல் பரிசு (Pongal Gift)

சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, தமிழக நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள பச்சரிசி, சர்க்கரை தரம், சப்ளை தொடர்பாக, அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு மற்றும் உணவு துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், வாணிப கழக மேலாண் இயக்குனர் பிரபாகர் ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர்.

பின், சக்கரபாணி அளித்த பேட்டி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுஉள்ளார். அவற்றின் விநியோகத்தை, முதல்வர், வரும் 9ம் தேதி துவக்கி வைக்கிறார். இதற்காக, கார்டுதாரர்களின் வீடுகளில் இன்று முதல், டோக்கன் வழங்கும் பணி துவங்கி உள்ளது.

ஜனவரி 9 முதல் 12 வரை பரிசு தொகுப்பு வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வாங்காதவர்கள், 13ம் தேதி வாங்கலாம். ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசில் இடம் பெற்றுள்ள பச்சரிசி, சர்க்கரை உட்பட, மாதந்தோறும் வழக்கமாக வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும், 60 சதவீதம் சப்ளை செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ள பொருட்களும், இன்னும் இரு தினங்களில் அனுப்பப்படும்.

கரும்பு (Sugarcane)

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பரிசில் கரும்பும் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கரும்பு கொள்முதலில் தவறு நடக்காமல் இருக்க, கலெக்டர்கள் தலைமையிலான குழு, விவசாயிகளை சந்தித்து கரும்பு கொள்முதல் செய்கிறது. ரேஷன் கார்டுதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்து, பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

மேலும் படிக்க

சாக்லெட் பிசினஸ் தொடங்க ரூ.10,000 போதும்: பல லட்சம் லாபம்!

பொங்கல் பரிசில் ஏதேனும் பிரச்சனையா? புகார் தர இலவச எண்கள் வெளியீடு!

English Summary: Important Notice: Pongal Gift can be purchased till 13th January!
Published on: 04 January 2023, 07:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now