News

Sunday, 04 September 2022 01:14 PM , by: T. Vigneshwaran

Jasmine is sold for Rs.2300

தமிழகத்தில் மல்லிகைப்பூ உற்பத்தியில் புகழ் வாய்ந்தது மதுரை. இங்கு மாட்டுத்தாவணியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மலர்களை விவசாயிகள் கொண்டு வந்து வியாபாரிகளிடம் விற்பனை செய்து செல்வார்கள். அதனை மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வார்கள்.

இந்த மார்க்கெட்டில் தமிழகம் முழுவதும் இருந்து வியாபாரிகள் வந்து மலர்களை வாங்கி செல்வார்கள். தற்போது வருகிற 8-ந் தேதி ஓணம் பண்டிகை நடைபெற உள்ளது.

இதையொட்டி கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களது வீடுகள் முன்பு பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் போட்டு வருகின்றனர். இதனால் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு மதுரையில் இருந்து பூக்கள் சப்ளை செய்யப்படுகிறது.

இதனால் பூக்களின் விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்து 300-க்கும், பிச்சிப்பூ ரூ.700-க்கும், முல்லைப்பூ ரூ.800-க்கும், சம்பங்கி பூ ரூ.150-க்கும், பட்டன் ரோஸ் பாக்கெட் ரூ.200-க்கும், செண்டுமல்லி ரூ. 80-க்கும் விற்பனையானது. இது பற்றி மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராமசந்திரன் கூறும்போது, கடந்த 1 வாரமாக மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில் ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க:

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு

மாணவனுக்கு விஷம் கலந்த குளிர் பானம்- தாய் செய்த கொடூரம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)