நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 July, 2022 7:26 AM IST

தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா பூஸ்டர் தடுப்பசி இலவசமாகவே செலுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு, பூஸ்டர் தடுப்பூசி போட விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.


திருச்சியில் திருவெரும்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

98.6 % தடுப்பூசி

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

தமிழகத்தில்  மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 98.6 சதவீதத்தினர் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் திருச்சியில் 95 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி முதல் போடும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை3 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆய்வு பணியில் ஈடுபட இருக்கிறோம்.

அடுத்ததாக தடுப்பூசி போடாதவர்களை தேடி கண்டுபிடித்து போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

கட்டணம் கிடையாது

தடுப்பூசி செலுத்துவதில் முதலில் தொய்வு ஏற்பட்டது. மக்களிடையே ஒருவிதத் தயக்கமும் நிலவியது. இதற்காக தற்போது மறுபடியும் அதிக விழிப்புணர்வு செய்து வருகிறோம். பொருளாதாரம் முடங்காமல் இருக்க தொழிலாளர்களுக்கு நிறுவன முதலாளிகள் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த வழிவகை செய்து கொள்ளுங்கள்.

10 நாட்களில்

இன்னும் 10 நாட்களில் தமிழக முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் எனும் திட்டத்தை கொண்டு வருவோம்.
நோயாளிகள் தற்போது எங்கேயும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலமாக 89 ஆயிரத்து 55 விபத்துகளில் சிக்கியவர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

சூரிய சக்தி பம்ப் செட் பராமரிப்பு மையம் அமைக்க ரூ.4 லட்சம் மானியம்!

வனத்துறைக்கு சின்னம் வடிவமைத்தால் ரூ.50,000 பரிசு!

English Summary: In private hospitals, booster vaccination is free!
Published on: 11 July 2022, 07:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now