News

Saturday, 06 July 2019 02:00 PM

தமிழக சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் விவசாகிகளின் நலனுக்காக குளிர்பதன வசதி கொண்ட தானிய கிடங்கு, நவீன அரிசி ஆலை ஆகியன அமைக்க பட உள்ளது.     

முக்கிய அறிவிப்புகள்

  • தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தினசரி 100 மெட்ரிக் டன் அரவைத் திறன் கொண்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலை அமைக்க படும்.
  • எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு 36 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 28 தனியா கிடங்குகள் பல்வேறு இடங்களில் அமைக்க பட உள்ளன. ஏற்கனவே உள்ள பழைய தானிய கிடங்குகளில் தேவையான சீரமைப்புகளை செய்யும்.     
  • 113 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உட்பட , 125 கூட்டுறவு நிறுவனங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டி தர படும்.
  • கன்னியா குமரி, அரியலூர், புதுக்கோட்டை, தேனி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய பண்டக சாலை அமைக்கபடும்.
  • தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் சூரிய ஒளி மூலம் இயங்கும் குளிர்பதன சேமிப்புக் கிடங்கு  நிறுவபட உள்ளது. இதன் மூலம் காய்கறிகள், புளி, பழங்கள், பருப்பு வகைகள், பூக்கள் மற்றும் இதர விவசாய பொருட்களை பாதுகாப்பான முறையில் சேமித்து  வைத்து கொள்ளலாம்.      
  • புதிய முயற்சியாக ரேஷன் கடைகளில் தொடங்கப்பட்ட அம்மா கூட்டுறவு சிறு அங்காடி மேலும் விரிவு படுத்தப்படும்.
  • காஞ்சிபுரத்தில் உள்ள சிட்லபாக்கம் ஏரி சீரமைக்கப்பட்டு, உபரிநீர் வீணாவது தடுக்க படும்.
  • வனத்துறையிலும் சில அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி  வனப்பாதுகாப்பு காவலர்களின் ஊதியம் உயர்த்தப்படும், மேலும் வன பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளை விரைவில் தொடங்கப்படும் என்றார்.  

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)