News

Tuesday, 22 September 2020 05:38 PM , by: Elavarse Sivakumar

மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் கொண்டாடி வெளிப்படுத்தவே பண்டிகைகள். அந்த வகையில், நவராத்திரி கொலு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி எனப் கைகள் வரிசை கட்டிக்கொண்டு வருகின்றன. இந்த பண்டிககைளை வழக்கத்திற்கு மாறாக, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த நவதானிய இனிப்புடன் கொண்டாட நீங்கள் ரெடியா? அப்படியானால் உங்களுக்குதான் இந்த செய்தி!

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஆரோக்கியமான முறையில் எதிர்வரும் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காகவே, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த பாரம்பரிய சிறுதானியம் மற்றும், நவதானியம் இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்கிறது, சின்னசேலத்தைச் சேர்ந்த ஓலைச்சுவடி இனிப்பகம்.

இங்கு இயற்கை தானியங்கள் ,சுத்தமான பசுநெய், தரமான கருப்பட்டி, ஆர்கானிக் வெல்லம், பாதாம், முந்திரி, பிஸ்தா, பேரிச்சை, நிலக்கடலை மற்றும் சுத்தமான தேன் மூலம் கிராமிய முறைப்படி செய்யப்பட்ட நமது தமிழ் பாரம்பரிய சிறுதானியம், நவதானியம் இனிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

கலப்பு கிடையாது  (No Mixed)

இந்த இனிப்பு வகைகளில், மைதா, அஸ்கா, டால்டா, அஜினா மோட்டோ, ஈஸ்ட் மாவுகள், கலப்பட எண்ணைகள், அலுமினியப் படலம், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமிகள், பூச்சி மருந்துகள், வேதி கிரீம்கள், விலங்குத் தோல் ஜெல்லிகள், போன்ற உடல் நலம் கெடும் பொருட்கள் சிறிதும் சேர்க்கப்படுவதில்லை. 

இனிப்பு வகைகள் (Sweets)

1.சிறுதானிய லட்டு
2.நரிப்பயிறு ரோல்
3.கருப்பட்டி மைசூர்பாக்
4.நவதானிய லட்டு
5.கருப்பட்டி பர்ப்பி.

இந்த 5 வகை இனிப்புகளும் தலா 200 கிராம் என மொத்தம் 1 கிலோ ரூ.590/- மட்டுமே.
வெளியூர் காரர்களுக்கு தபால் செலவு தனி. நிறுவனங்களுக்கு தரமான ஆரோக்கிய இனிப்புகள் தீபாவளி கிஃப்ட் பேக்குகள் கிடைக்கும்.

முன்பதிவு செய்துகொள்ள 
ஓலைச்சுவடி பாரம்பரிய இயற்கை விற்பனையகம்
Ottraivaadai street,

Nainarpalayam Rd

Chinnasalem

Tamil Nadu 606201

என்ற முகவரியிலும்,
099947 68761 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்க...

அமலுக்கு வருகிறது அரிசி ATM- கூட்ட நெரிசலைத் தடுக்க புதிய யுக்தி!

தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)