News

Wednesday, 03 October 2018 11:55 AM

சர்க்­கரை துறைக்­கான, 5,538 கோடி ரூபாய் ஊக்­கச் சலுகை திட்டத்­திற்கு, மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்லி தலை­மை­யில் நடைபெற்­ற மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு, ஒப்­பு­தல் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின்படி கரும்பு விவ­சா­யி­க­ளின் உற்­பத்தி ஆத­ரவு தொகை, இரு மடங்­காக உயர்த்­தப்­பட்டு, 1 குவின்­டா­லுக்கு, 13.88 ரூபா­யாக நிர்ணயிக்கப்­ பட்­டுள்­ளது. இது தவிர, குறைந்­த­பட்ச ஏற்­று­மதி திட்­டத்­தின் கீழ், ஆலைகள் ஏற்­று­மதி செய்­யும், 50 லட்­சம் டன் சர்க்­க­ரைக்கு, உள்­நாட்டு சரக்கு போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட செல­வு­களை, அரசே ஏற்­றுக் கொள்­ளும். மேலும், நடப்பு செப்­டம்­ப­ரு­டன் முடிந்த, 2017-18ம் சந்தை பரு­வத்­தில், சர்க்கரை உற்­பத்தி, 3.20 கோடி டன்­னாக உய­ரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் சந்தை பரு­வத்­தில், சர்க்­கரை உற்­பத்தி, 3.50 கோடி டன்­னாக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)