பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 20 November, 2022 8:31 PM IST
Ration shops income

ரேஷன் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் வருவாய் வழிகளை ஆராயுமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் உணவுத் துறை செயலர்களை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.

ரேஷன் கடைகள் (Ration Shops)

நவம்பர் 18ஆம் தேதி மாநில/யூனியன் பிரதேச உணவுத்துறை செயலர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படும் பொது விநியோக நடைமுறைகள் பற்றி அதன் செயலாளர் விளக்கினார். உணவு தானியங்கள், மளிகை பொருட்கள், திணை வகைகள் விற்பனை செய்வதையும், ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மாநாட்டில், தமிழகத்தின் முயற்சிகளுக்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் பாராட்டு தெரிவித்தார். பல்வேறு திட்டங்களுடன் தொடர்புடைய அரிசி செறிவூட்டல், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து மாநிலங்களின் உணவுத் துறை செயலாளர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டன.

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக மாநாட்டுக்கு தலைமை வகித்த மத்திய அரசு செயலர் உறுதியளித்தார். 2023-24ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை முழுமையாக வழங்குவதை இந்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்று சோப்ரா கூறினார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு (One Nation One Ration Card)

நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல், விநியோகம் ஆகியவற்றை உறுதிசெய்ய முழுமையாக தயாராக இருக்குமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தோருக்கு உணவு தானியங்களை உறுதி செய்வதில் மாநிலங்கள் எடுத்துள்ள முயற்சிகளையும் இம்மாநாட்டில் அவர் பாராட்டினார்.

மேலும் படிக்க

ரேஷன் கடைகளில் மோசடி: கடும் நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு!

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு!

English Summary: Income should be increased in ration shops: central government emphasis!
Published on: 20 November 2022, 08:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now