வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 July, 2022 10:49 PM IST

கடைசி தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்யாவிட்டால்,7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வருமானவரிச் சட்டம் வழிவகை செய்கிறது. எனவே காலக்கெடுவிற்குள் வருமான வரித் தாக்கல் செய்வதே நல்லது.

காலக்கெடு

2021-22ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கு வரும் ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, விரைவில் வருமான வரித் தாக்கல் செய்யும்படி வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது. மறுபுறம், கடைசி தேதியை நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தாமதக் கட்டணம்

கடைசி தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம். கடைசி தேதிக்கு பிறகு வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டுமெனில் 5000 ரூபாய் வரை தாமதக் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும். 5 லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு தாமதக் கட்டணம் 1000 ரூபாய்.இவ்வகையில் டிசம்பர் 31ஆம் தேதி வரை தாமதக் கட்டணத்துடன் வருமான வரித் தாக்கல் செய்யலாம்.

200% வரை அபராதம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்யாவிட்டால் உங்கள் மீது வருமான வரித் துறை நடவடிக்கை எடுக்கக்கூடும்.
வருமான வரித் தொகையில் 50% முதல் 200% வரை அபராதமாக விதிப்பதற்கு அதிகாரம் உள்ளது. இதுபோக வட்டியும் செலுத்த நேரிடும்.

சட்ட நடவடிக்கை

10,000 ரூபாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் வருமான வரித் தாக்கல் செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் இந்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.

சிறை தண்டனை

இவர்களுக்கு சட்டப்படி 6 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்க விதிகள் வழிவகை செய்கிறது. எனவே சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தவிர்க்க, காலக்கெடுவிற்குள் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்வது நல்லது.

மேலும் படிக்க...

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை- TNPSC அறிவிப்பு!

இதய ஆரோக்கியத்திற்கு தினமும் 3 அல்லது 4 முந்திரி!

English Summary: Income Tax Filing - Up to 7 Years Jail for Failure!
Published on: 28 July 2022, 10:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now