மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 August, 2021 8:36 PM IST
Increase Coffee Yield

கூடலூர் பகுதியில் காபி விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் சுமார் 6 மாதங்கள் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் பெய்வது வழக்கம். இதை பயன்படுத்தி விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி பணப்பயிரான காபி, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி போன்றவை விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக காபி பயிரில் அரபிக்கா, ரொபஸ்டா ஆகிய 2 வகை பயிரிடப்படுகிறது.

வழக்கமாக மே மாதம் கோடை மழையை தொடர்ந்து காபி செடிகள் பூக்க தொடங்கிவிடும். அதன்பிறகு ஜூன் மாதம் தொடங்கி பெய்யும் தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து காபி விளைச்சல் இருக்கும். பின்னர் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காபி அறுவடை சீசன் தொடங்கும்.

கொத்தவரங்காயில் இவ்வளவு நன்மைகளா? உடனே அறிந்து கொள்ளுங்கள்!

லாபம் கிடைக்கும்

இந்த நிலையில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பூத்துக்குலுங்கிய காபி செடிகளில் காய் பிடிக்க தொடங்கி உள்ளது. மேலும் விளைச்சலும் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கூடலூர் பகுதியில் பருவமழை தாமதமாக பெய்தது. எனினும் தற்போது பரவலாக பெய்து வருகிறது. இது காபி செடிகளுக்கு உகந்ததாக உள்ளது. இதன் மூலம் காபி விளைச்சல் அதிகரித்து இருக்கிறது. இதனால் காபி பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

மேலும் படிக்க

மண்வளத்தை மேம்படுத்த மண்புழு உரம் தயாரிப்பது அவசியம்!

English Summary: Increase coffee yield! Farmers happy!
Published on: 12 August 2021, 08:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now