News

Wednesday, 26 October 2022 02:37 PM , by: R. Balakrishnan

7th pay commission

மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்திய உடனேயே, அசாம், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகள் அதன் 7வது ஊதியக் குழு பரிந்துரையின்படி தங்கள் மாநில ஊழியர்களின் DA வை உயர்த்தியுள்ளன.

அகவிலைப்படி உயர்வு

தற்போது தீபாவளி பண்டிகை முடிந்து அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அடுத்த டிஏ உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் அடுத்த டிஏ உயர்வை எப்போது பெறுவார்கள் என்று இப்போது கேட்டு வருகின்றனர். மத்திய அரசு இந்த ஆண்டு மார்ச் மாதம் அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி, சுமார் 47.68 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைகிறது. முதல் டிஏ உயர்வுக்கு கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு, அடுத்த கட்ட டிஏ உயர்வு செப்டம்பர் 2022 இல் அறிவித்துள்ளது.

அறிக்கையின்படி அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு DA 3 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும், கடந்த DA உயர்வில் மத்திய அரசு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வை 4 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. DA உயர்வை 34 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

முதல் DA மார்ச் 30, 2022 இல் அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் இரண்டாவது DA உயர்வு செப்டம்பர் 28, 2022 அன்று அறிவிக்கப்பட்டது. இப்போது, அரசு ஊழியர்கள் அடுத்த உயர்வைப் பெற ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதன்படி இப்போதிலிருந்து சுமார் ஆறு மாதங்களில் மார்ச் 2023 இல் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க

PM Kisan: ஏன் சில விவசாயிகளுக்கு மட்டும் பணம் வரவில்லை: காரணம் இது தான்!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தீபாவளி பரிசு அளித்த மாநில அரசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)