News

Friday, 02 September 2022 03:49 PM , by: Deiva Bindhiya

Increase in purchase limit of pulses to 40%!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? கொள்முதல் வரம்பு எவ்வாறு அதிகரித்தது என்பதை இப் பதிவு விளக்குகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், விலை ஆதரவுத் திட்டம் மற்றும் விலை நிலைப்படுத்தும் நிதியத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட பருப்பு இருப்பை, பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யவும், துவரை, உளுந்து மற்றும் மசூர் பருப்புகளை கொள்முதல் செய்வதற்கான வரம்பை தற்போதைய 25% லிருந்து 40% ஆக அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகள், 15 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகளை, ஆதார மாநிலத்தின் விற்பனை விலையிலிருந்து ஒரு கிலோ ரூ.8 வீதம் தள்ளுபடி விலையில், முதலில் வருவோர்க்கு முதலில் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். தத்தமது மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டம், பொது வினியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்றவற்றுக்கு, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டம் 12 மாத காலத்திற்கு அல்லது 15லட்சம் மெட்ரிக் டன் பருப்பு காலியாகும் வரை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அரசு ரூ. 1200 கோடி செலவிட உள்ளது.

மேலும் படிக்க:

ரூ.352 சரிவு: இரண்டாவது நாளாக சரிவை கண்ட தங்கம் விலை

விவசாயிகளுக்கு 25% மானிய உதவி: வெளியானது அருமையான அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)