அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 June, 2023 2:33 PM IST
Increase in the price of pulses! What is the reason?

குறைந்த விளைச்சலினாலும் பதுக்கலாலும் துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

சமீபத்தில் நாடு முழுவதும் துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது, அவ்வப்போது பருப்புகளின் விலை உயர்ந்து, மற்ற பருப்பு வகைகளின் விலையிலும் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகிறது.

உலகிலேயே பருப்பு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், இந்தியா பருப்பு பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்க்கது.

ஓவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் சுமார் 600 டன் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இது தேவையான அளவை விட குறைவாக உள்ளது என்ற காரணத்தினால் வெளிமாநிலங்களில் இருந்து அதிகம் கொண்ட வர வேண்டிய நிலை உண்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா சபையில் நடப்பாண்டை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்த காரணத்தால் மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறுதானிய சாகுபடியை அதிகப்படுத்த பல மானிய உதவிகளை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக பல விவசாயிகள் பருப்புக்கும் எண்ணெய் விதைகளுக்கு மாற்றாக சிறுதானிய சாகுபடி செய்துவந்தனர்.

இதனால் பருப்புகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பருப்புகளின் தட்டுப்பாடும் தற்போது அதிகரித்து வருகிறது. இதை பல ஆன்லைன் விற்பனையாளர்கள் அறிந்துகொண்டு லாபநோக்குடன் பல ஆயிரம் டன் கணக்கான பருப்பு வகைகளை பதுக்கி வைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக துவரம் பருப்பு தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்து, ஒரே வாரத்தில், 40 ரூபாய் வரை உயர்ந்து, கிலோ ரூ.160க்கு விற்கப்படுகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன.

அதிகம் இருப்பு வைப்பதை தடுப்பதற்கான முயற்சிகளை அதிகாரிகள் எடுக்கவேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருக்கிறது.

பரூப்பு வகைகளின் தட்டுப்பாடுகளை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாக உள்ளது.

மேலும் படிக்க

விவசாயிகளை கவரும் e-NAM: ஒரே வாரத்தில் 170 டன் விவசாய பொருட்கள் விற்பனை!

"5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி இலக்கு" - வேளாண் அமைச்சர்

 

English Summary: Increase in the price of pulses! What is the reason?
Published on: 09 June 2023, 02:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now