நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 January, 2022 11:07 AM IST

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்த ஏதுவாக வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் இந்த அறிவிப்பு, பெங்களூரு வாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

பொருளாதார இழப்பு (Economic loss)

உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த 2 ஆண்டுகளாக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
இதனால் தனிமனிதர்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

கட்டுப்பாடுகள் (Restrictions)

இதன் ஒருபகுதியாக, கர்நாடக மாநிலத்திலும், கொரோனா வைரஸின் 3வது அலை படுவேகமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு அன்றாடம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பெங்களூருவில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது. ஒரே நகரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேல் இருப்பதால், மாநகராட்சி வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில், பலவிதக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

31ம் தேதி வரை 144

இது மட்டுமல்லாமல், கொரோனா பரவலைத் தடுக்க ஏதுவாக மாநகராட்சி, சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், பெங்களூருவில் கொரோனாப் பரவலை தடுக்கும் வகையில் ஜனவரி 19ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு காவல் ஆணையர் கமல்பந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பெங்களூருவில் 19ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த 144 தடை உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

தடை

144 தடை அமலில் இருக்கும்போது பெங்களூருவில் பேரணி, ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்ணா, போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது.

200 பேருக்கு அனுமதி (Admission for 200 people)

திருமண நிகழ்ச்சியில் 200 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை. மேலும், ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது தேசிய பேரிடர் மேலாண்மை, கர்நாடக நோய் பரவலைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஐஸ் கிரீம் தோசை சாப்பிட ஆசையா?

கொரோனாத் தொற்றிலிருந்து விரைவில் விடுபட உதவும் உணவுகள்!

English Summary: Increasing Corona Disruption - 144 Prohibition Orders Until 31st!
Published on: 19 January 2022, 10:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now