சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 13 July, 2022 7:00 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் அதிகமாக உள்ளனர்.தொற்று பரவலை தடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை பலக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் (Corona Virus)

பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கடைப்பிடிக்கப்படுவதில்லை. சமூக இடைவெளி, முக கவசம் அணிவது இல்லை. தவிர, கடைகளுக்கு வருவோர், வெளியில் சென்று வீடு திரும்புவோர், 'சானிடைசர்' கொண்டு கைகளை சுத்தம் செய்வதில்லை.

தடுப்பு முறைகள் (Prevention Methods)

முக கவசம் அணிவது, சானிடைசர் கொண்டு கை சுத்தம் செய்வது உள்ளிட்ட, தடுப்பு முறைகளிலும் மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பொது இடங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்க, சுகாதாரம், உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக புனிததோமையார்மலை, தாம்பரம், வண்டலுார், காட்டாங்கொளத்துார், திருப்போரூர், ஆகிய பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

தற்போது மாவட்டத்தில், 1,061 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்கள் வசதிக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில், தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அங்கேயே கொரோனா பரிசோதனைகளும் நடக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்தி, கொரோனா விதிகளை கடைபிடிக்க, கடுமையான நடவடிக்கையை, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

10 மாதக் குழந்தைக்கு ரயில்வே வேலை: வரலாற்றில் இதுவே முதன்முறை!

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி!

English Summary: Increasing daily corona infection: Necessary to follow preventive measures!
Published on: 13 July 2022, 07:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now