மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 September, 2019 2:05 PM IST

குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கண்டறியப்பட்டுள்ள இண்டியன் பைரேட் எனும் "டாருகஸ் இண்டிகா" வண்ணத்துப்பூச்சி. சேலம் இயற்கை கழகம் நிர்வாகிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்காடு மலையை ஒட்டியுள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகே உயிரினங்களை கண்டறியும் ஆய்வுக்குச் சென்ற போது புதிய அரிதான வண்ணத்துப்பூச்சியை சேலம் இயற்கை கழகம் அமைப்பை சேர்ந்த முருகேசன் மற்றும் இளவரசன் கண்டறிந்துள்ளனர்.  

இது குறித்து இயற்கை கழகம் நிர்வாகிகள் கூறியதாவது:

ஒளி ஊடுருவும் தன்மை உடைய இறகுகள் கொண்ட அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. அதில் மிகவும் அரிதான  இண்டியன் பைரேட் எனும் "டாருகஸ் இண்டிகா" (Indian Pierrot - Tarucus Indica) வண்ணத்துப்பூச்சி சேலம் குரும்பப்பட்டி பூங்காவை அடைந்துள்ளது.

டாருகஸ் இண்டிகா (Tarucus Indica)

இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் தமிழில் நிலன் வகை என்று அழைக்கப்படுகின்றன. ஒளி ஊடுருவும் தன்மை உடைய இறகுகள் கொண்டவை. 2 அடி செமீ நீளம் உள்ள இந்த வண்ணத்துப்பூச்சியின் இறகுகள் 26 மிமீ முதல் 29 மிமீ நீளத்துடன் காணப்படும். இவற்றின் வளரும் சூழல், வசிக்கும் தாவரம், வாழ்க்கை சுழற்சி ஆகிய தகவல்களை வனத்துறையினர் மற்றும் உயிரின ஆய்வாளர்கள் உதவியுடன் ஆராய்ந்து பதிவு செய்யவுள்ளோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இவ்வகை வண்ணத்துப்பூச்சிகள் இந்தியாவில் மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Indain Peirrot! Tarucus Indica Butterfly Found in Salem District Yercaud Foothills Kurumpappatti Zooligical Park
Published on: 04 September 2019, 02:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now