சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 25 May, 2021 1:31 PM IST

இந்தியா - இஸ்ரேல் இடையேயான வேளாண் கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 3 ஆண்டு செயல் திட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

3 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்து

இந்தியா, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான வேளாண் கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக வளர்ந்து வரும் இரு தரப்பு கூட்டணி மற்றும் இரு நாட்டு உறவுகளில் வேளாண்மை மற்றும் நீர் துறைகளை மையப்படுத்தி அங்கீகாரம் வழங்கி, விவசாய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மூன்று வருட செயல் திட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

இது குறித்து பேசிய மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்தியாவும் இஸ்ரேலும் இந்திய-இஸ்ரேல் வேளாண் சிறப்புத் திட்ட மையங்கள் மற்றும் இந்திய-இஸ்ரேல் சிறப்பு கிராமங்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. வேளாண் துறைக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகறது. மேலும் கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் வேளாண் துறையில் இந்தியாவும் இஸ்ரேலும் இருதரப்பு உறவுகளில் ஈடுபட்டு வருகிறது.

இது 5-வது இந்திய-இஸ்ரேல் வேளாண் செயல் திட்டம் இதுவரை நான்கு செயல் திட்டங்களை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். விவசாய சமூகத்தின் நன்மைக்காக வேளாண் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை இந்த புதியத் திட்டம் வலுப்படுத்தும் என்றார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்

இந்த இஸ்ரேலிய செயல் திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்கள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான தொழில்நுட்பப் பரிமாற்றம், தோட்டக்கலையின் உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்துவதுடன் விவசாயிகளின் வருவாயையும் உயர்த்தும் என்றும் அவர் கூறினார்.

செயல்திட்டத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர்கள் திரு பர்ஷோத்தம் ருபாலா, திரு கைலாஷ் சவுத்ரி, இஸ்ரேல் நாட்டின் அயல்நாட்டு விவகாரங்கள், இந்தியாவின் வெளிநாட்டு விவகாரங்கள், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க....

நிலத்தடி நீருக்கும் பரிசோதனை அவசியம்!

தென்னை விவசாயத்தைச் சேர்ந்த 10,000 பேர் வேலையிழப்பு!

ஊரடங்கில் வேளாண் இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க வழிவகை! அதிகாரி தகவல்

English Summary: India and Israel sign a three-year work program for cooperation in Agriculture
Published on: 25 May 2021, 01:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now