நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 April, 2023 3:59 PM IST
India avoids 39 million tonnes of CO2 emissions by using of LED bulb says PM modi

370 மில்லியனுக்கும் அதிகமான எல்இடி பல்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 39 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைத் தவிர்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து உலக வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Making it Personal: How Behavioral Change Can Tackle Climate Change’ என்கிற நிகழ்வில் ஆன்லைன் வாயிலாக பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். காலநிலை மாற்றத்தை  தனியாக எதிர்த்துப் போராட முடியாது என்றார்.

ஒரு யோசனை விவாத மேசையிலிருந்து இரவு உணவு மேசைக்கு மாறும்போது, அது ஒரு வெகுஜன இயக்கமாக மாறுகிறதுஎன்றார். மேலும் இந்தியா தலைமையிலான மிஷன் லைஃப் (Mission LiFE) (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) நோக்கங்களை தனது உரையில் விளக்கினார் பிரதமர்.

இந்த பிரச்சினையில் இந்தியாவின் மக்கள் உந்துதல் முயற்சிகளை எடுத்துரைத்த அவர், “இந்த உலகளாவிய பிரச்சினையில் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா நிறைய செய்துள்ளது. எல்.ஈ.டி பல்புகளுக்கு மாறியதை வெற்றிகரமாகச் செய்தவர்கள் மக்கள்தான். கிட்டத்தட்ட 370 மில்லியன் எல்இடி பல்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 39 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைத் தவிர்க்க உதவுகிறது.

மிஷன் லைஃப்-யின் ஒரு பகுதியாக நுண்ணீர் பாசனம் மூலம் இந்தியாவின் விவசாயிகள் கிட்டத்தட்ட 7,000 ஹெக்டேர் விளைநிலங்களை பாதுகாப்பதை உறுதி செய்துள்ளதாக பிரதமர் மேலும் கூறினார். மிஷன் லைஃப் மூலம் எதிர்பார்க்கப்படும் பலன்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், இந்தியா 22 பில்லியன் யூனிட் எரிசக்தி, 9 டிரில்லியன் லிட்டர் தண்ணீரைச் சேமிக்கும், கழிவுகளை 375 மில்லியன் டன்கள் குறைக்கும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டன்களை மறுசுழற்சி செய்யும் என்று காலநிலை மற்றும் நடத்தை மாற்றங்கள் குறித்து உலகளாவிய நிபுணர்களிடம் தெரிவித்தார்.

"இவை அனைத்தும் மட்டுமல்ல, மிஷன் லைஃப்  15 பில்லியன் டன் உணவு வீணாவதைக் குறைக்கவும் உதவும்" என்று குறிப்பிட்டார், உலகம் முழுவதும் உள்ள நாடுகளை ஊக்குவிப்பதில் உலகளாவிய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்ட மோடி, “உலக வங்கி குழுவானது மொத்த நிதியுதவியின் ஒரு பங்காக காலநிலை நிதியை 26% முதல் 35% வரை அதிகரிக்க விரும்புகிறது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நடத்தை முயற்சிகளுக்கும் போதுமான நிதியுதவி முறைகள் உருவாக்கப்பட வேண்டும். மிஷன் லைஃப் போன்ற நடத்தை முன்முயற்சிகளுக்கு உலக வங்கியின் ஆதரவைக் காண்பிப்பது பல மடங்கு நல்ல விளைவை ஏற்படுத்தும்என்று மோடி குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி COP-26 இல் பிரதமர் மோடியால் மிஷன் லைஃப் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு வெகுஜன இயக்கமாக தனிநபர்களையும் சமூகங்களையும் இயற்கையுடன் ஒத்திசைவான மற்றும் தீங்கு விளைவிக்காத வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க தூண்டுகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் 2028 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 80% கிராமங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றப்படும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது.

யுஎன்இபியின் (UNEP) கூற்றுப்படி, உலகளவில் 8 பில்லியன் மக்களில் 1 பேர் தங்கள் அன்றாட வாழ்வில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடத்தையை பின்பற்றினால், உலகளாவிய கார்பன் வெளியேற்றம் 20% வரை குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

ஜல் ஜீவன் திட்டத்தில் சாதனை- காஞ்சி மாவட்ட ஆட்சியருக்கு பிரதமர் விருது

English Summary: India avoids 39 million tonnes of CO2 emissions by using of LED bulb says PM modi
Published on: 16 April 2023, 03:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now