மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 March, 2021 7:53 AM IST
Credit : Dinamalar

உலகமே கொரோனாவைக் கண்டு அஞ்சிய வரும் நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது இந்தியா. இந்தியா முழுவதும் தடுப்பூசி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐ.நா., (UN) அமைதிக் குழுவினருக்கு, இந்திய அரசு பரிசாக அறிவித்த இரண்டு லட்சம், 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் (Corona Vaccine), இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன. 

'கோவிஷீல்டு (Covishield) மற்றும் 'கோவாக்சின் (Covaxin) தடுப்பூசிகள், நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு, பல நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, 70 நாடுகளுக்கு, ஆறு கோடி டோஸ், கொரோனா தடுப்பூசிகளை (Corona Vaccine), இந்திய அரசு வழங்கியுள்ளது. ஐ.நா.,வின் அமைதிக் குழுவுக்கு, இரண்டு லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பரிசாக வழங்க உள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சமீபத்தில் அறிவித்தார். உலகம் முழுவதிலும் இருந்து, 121 நாடுகளைச் சேர்ந்த, 85 ஆயிரத்து, 782 பேர், ஐ.நா., அமைதிக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஐ.நா.-வுக்கு தடுப்பூசி

இரண்டு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை, இந்திய அரசு, இன்று ஐ.நா. அமைதிக்குழுவிறகு அனுப்பி வைக்கிறது. தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட, 'கத்தார் ஏர்வேஸ்' விமானம், மஹாராஷ்டிராவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து, இன்று புறப்பட்டு, ஐரோப்பிய நாடான டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் சென்றடைகிறது. அங்கு, பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின் அமைதிக் குழுவினருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. இந்திய அரசின் உதவிக்கு, ஐ.நா., பொது செயலர் ஆன்டோனியோ கட்டர்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பாராட்டு

பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்கும் இந்திய அரசின் செயலை, அமெரிக்க எம்.பி., வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து, கலிபோர்னியாவைச் சேர்ந்த, ஜனநாயக கட்சி எம்.பி., கேரன் பாஸ் கூறியதாவது: ஆப்பிரிக்காவைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, 'கோவிஷீல்டு' தடுப்பூசியை இந்திய அரசு அளித்துள்ளது. மனிதாபிமானத்தின் மீது, இந்தியாவுக்கு உள்ள அழுத்தமான நம்பிக்கையை, இந்த செயல் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

ஈரோட்டில் ஏல முறையில் நாட்டு சர்க்கரை மற்றும் பூக்கள் விற்பனை

கோடை உழவுக்காக நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்!

English Summary: India donates 2 lakh corona vaccines to UN peace group
Published on: 27 March 2021, 07:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now