மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 April, 2021 7:38 PM IST
Credit : Dinamalar

தற்போது கொரோனா வைரஸின் (Corona Virus) இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து தடுப்பு மருந்துகள் (Vaccine) செலுத்தும் பணி கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் துரிதமாக நடைபெற்று வருகிறது.

தடுப்பு மருந்து செலுத்துதல்:

கடந்த 92 நாட்களில் இந்திய அரசு 12 கோடி டோஸ் தடுப்பு மருந்துகளை குடிமக்களுக்கு செலுத்தி உள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது. உலகில் வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு வேகமாக தடுப்பு மருந்துகளை குடிமக்களுக்கு செலுத்தவில்லை என்று பெருமிதமாக தெரிவித்துள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

இந்தியா முதலிடம்:

தடுப்பு மருந்துகளை வேகமாகச் செலுத்துவதில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது அமெரிக்கா (USA). 97 நாட்களில் அமெரிக்கா இந்த இலக்கை எட்டி உள்ள நிலையில், சீனா (China) 108 நாட்களில் இலக்கை எட்டி மூன்றாம் இடம் பெற்றுள்ளது. தடுப்பு மருந்துகள் பற்றாக்குறை ஒரு பக்கம் ஏற்பட்டபோதும் மறுபக்கம் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படும் வேகம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதே வேகத்தில் சென்றால் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் 80 சதவீதம் பேருக்கு வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி!

கோடை வெயில் சுட்டெரிப்பதால், பனை நுங்கு விற்பனை அமோகம்!

English Summary: India ranks first in the world in pace of corona vaccine delivery
Published on: 18 April 2021, 07:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now