மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 July, 2019 11:45 AM IST

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட ஒரு சில   வடமாவட்டங்களில் மேலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வெப்பம் தனிந்து மேக மூட்டமான வானிலையே  நிலவி வருகிறது. 

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்ததை தொடர்ந்து எல்லையோர மாவட்டங்களான  வேலூர், ஓசூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு அதாவது இன்று  வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்க பட்டுள்ளது .

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  இதுவரை 89 மி.மீ. மழை பதிவாக உள்ளது” . கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனம் 9 செ.மீ., ஆரணி, திருப்பத்தூரில் 8 செ.மீ., உத்திரமேரூரில் 7 செ.மீ. மழை பதிவாக உள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர் உயர வாய்ப்பில்லை எனவும், இந்நிலை நீடித்து தொடர் மழை பெய்து வந்தால் நிச்சயம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார். வறட்சியை போக்க கூடிய அளவிற்கு மழை பொழிய வேண்டுமென்றால் அது வடகிழக்கு பருவமழையின் போது தான் எதிர்பார்க்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள் என கூறுகின்றனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Indian Meteorological Department Forcast Heavy Rainfall Or Thunderstorm In Tamilnadu And Puthucherry
Published on: 27 July 2019, 11:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now