மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 August, 2023 2:42 PM IST
INDIA'S FIRST 3D PRINTED POST OFFICE!

43 நாட்களில் கட்டப்பட்டது இந்தியாவின் முதல் 3டி அச்சிடப்பட்ட தபால் நிலையம், பெங்களூரில் இன்று திறக்கப்பட்டது

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஐஐடி மெட்ராஸின் தொழில்நுட்ப ஆதரவுடன் லார்சன் & டூப்ரோ லிமிடெட் மூலம் கட்டப்பட்ட தபால் நிலையத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் 3டி அச்சிடப்பட்ட தபால் நிலையத்தை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.

மத்திய அமைச்சரால் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட தபால் அலுவலகம், அதன் காலக்கெடுவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, வெறும் 43 நாட்களில் முடிக்கப்பட்டது. கட்டுமானப் பொறியியல் துறையின் கட்டிடத் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமான மேலாண்மைப் பிரிவின் பேராசிரியர் மனு சந்தானத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஐஐடி மெட்ராஸின் தொழில்நுட்ப ஆதரவுடன் லார்சன் & டூப்ரோ லிமிடெட் அதன் கட்டுமானத்தை மேற்கொண்டது.

“பெங்களூரு எப்போதும் இந்தியாவின் புதிய அவதாரத்தை நிறுவிக்கும் நகரமாக உள்ளது. இந்த 3டி அச்சிடப்பட்ட தபால் நிலைய கட்டிடத்தின் அடிப்படையில் நீங்கள் இன்று பார்த்த புதிய அவதாரம், அதுதான் இன்றைய இந்தியாவின் வளர்ச்சி. அந்த உணர்வோடுதான் நம் நாடு இன்று முன்னேறி வருகிறது” என்று அமைச்சர் வைஷ்ணவ் கூறினார்.

தபால் அலுவலகம் 1,021 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. அதன் கட்டுமானமானது 3D கான்கிரீட் பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது, இது ஒரு முழுமையான தானியங்கி கட்டிடக் கட்டுமானத் தொழில்நுட்பமாகும், இதில் ஒரு ரோபோடிக் பிரிண்டர் அனுமதிக்கப்பட்ட வடிவமைப்பின்படி கான்கிரீட் அடுக்கை அடுக்கி வைக்கிறது.

தர கான்கிரீட் (grade concrete) - இது விரைவாக கடினமாகும் இயல்பை கொண்டுள்ளது - கட்டமைப்பை அச்சிடும் நோக்கத்திற்காக அடுக்குகளுக்கு இடையில் பிணைப்பை விரைவாக உறுதிப்படுத்த இது பயன்படுகிறது.

L&T செயல்பாட்டுத் தலைவர் (தெற்கு மற்றும் கிழக்கு) ஜார்ஜ் ஆபிரகாம் இது குறித்து தெரிவித்ததாவது, “முன் பதிவேற்றம் செய்யப்பட்ட வடிவமைப்புகளை உள்ளடக்கிய ரோபோவின் உதவியின் காரணமாக, எங்களால் முழு கட்டுமான நடவடிக்கைகளையும் 43 நாட்களில் முடிக்க முடிந்தது. வழக்கமான முறையில் கட்டுமானம் செய்யப்பட்டிருந்தால் சுமார் 6-8 மாதங்கள் ஆகியிருக்கும் என்று தெரிவித்தார்.

23 இலட்சம் செலவில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது, இது வழக்கமான முறைகளில் உள்ள செலவை விட 30-40 சதவீதம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

வெள்ளம் வருவதை முன்கூட்டியே அறிய புதிய செயலி!

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான தேர்வு! விண்ணப்பிப்பது எப்படி?

English Summary: INDIA'S FIRST 3D PRINTED POST OFFICE!
Published on: 18 August 2023, 02:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now