News

Saturday, 04 September 2021 08:50 PM , by: R. Balakrishnan

First Gold in Badminton

பாரா ஒலிம்பிக் பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்தார் பிரமோத் பஹத்.

ஜப்பானின் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 16 வது பாரா ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்., 3 பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பஹத், ஜப்பானின் தய்சுகேவை சந்தித்தார். இதில் 21-11, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் மனோஜ் சர்கார், பிரிட்டனின் டேனியலிடம் 8-21, 10-21 என எளிதாக வீழ்ந்தார்.

பிரமோத் பிரமாதம்

பைனலில் பிரமோத், டேனியல் மோதினர். முதல் செட்டில் 2-5 என பின்தங்கிய பிரமோத், பின் சிறப்பாக செயல்பட 21-14 என வென்றார். அடுத்து நடந்த இரண்டாவது செட்டில் பிரமோத் 3-11 என பின்தங்கினார். இதன் பின் எழுச்சி பெற்ற பிரமோத் அடுத்தடுத்து புள்ளிகள் குவித்தார். கடைசியில் டேனியலை முந்திய பிரமோத், இரண்டாவது செட்டை 21-17 என கைப்பற்றினார். 45 நிமிட போராடத்தின் முடிவில் 21-14, 21-17 என வென்ற பிரமோத், பாரா ஒலிம்பிக் பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மனோஜ்-தய்சுகே மோதினர். முதல் செட்டை மனோஜ் 22-20 என போராடி வென்றார். அடுத்த செட்டை 21-13 என எளிதாக வசப்படுத்தினார். 47 நிமிட போட்டியில் முடிவில் 22-20, 21-13 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற மனோஜ், வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார்.

ஒட்டுமொத்தமாக இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் பட்டியலில் 25 வது இடத்துக்கு முன்னேறியது.

மேலும் படிக்க

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல்: வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்!

பாராலிம்பிக் வில்வித்தையில் வெண்கலம்; உயரம் தாண்டுதலில் வெள்ளி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)