மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 May, 2023 11:24 AM IST
India's fish production has reached 162.48 lakh tonnes says Minister Rupala

இந்தியாவின் மீன் உற்பத்தி 2021-22 ஆம் நிதியாண்டில் 162.48 லட்சம் டன்னை எட்டி சாதனை படைத்திருப்பதாக, ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

சாகர் பரிக்கிராமா திட்டத்தின் 5-வது கட்ட யாத்திரை கடந்த 17 ஆம் தேதி மும்பையில் தொடங்கி நேற்று (மே 19, 2023) கோவாவில் முடிவடைந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ரூபாலா, பல்வேறு விதமான மீன் வகைகளை உற்பத்தி செய்யும் தொன்மை வாய்ந்த இயற்கை வளங்கள், இந்தியாவில் உள்ளது என்றார். உணவு, ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு, வருமானம் என பல வகைகளில் நமக்கு உறுதுணையாக இருக்கும் மீனில், உடல் ஆரோக்கியத்திற்கும், ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கும் துணைபுரியும் ஒமேகா -3 ஃபேட்டி அமிலம் அதிகளவில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த மீன்வளத்துறை 2.8 கோடி பேருக்கு வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கியிருப்பதுடன், பலரை தொழில்முனைவோராகவும் மாற்றியிருக்கிறது என்றும் அமைச்சர் கூறினார். கடந்த 75 ஆண்டுகளில் மீன்வளத்துறை, மீன் உற்பத்தியை 22 மடங்கு வரை அதிகரித்து வர்த்தகம் குவிக்கும் துறையாக மாறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த 1950-51 ஆம் நிதியாண்டில் 7.5 லட்சம் டன்னாக இருந்த மீன் உற்பத்தி, கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் 162.48 லட்சம் டன்னாக அதிகரித்து சாதனை படைத்து இருப்பதாகவும், இது கடந்த 2020-21 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 10.34 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். உலக நாடுகளில் மீன் உற்பத்தியில் 8 சதவீதத்தை பூர்த்தி செய்து இந்திய மிகப்பெரிய மூன்றாவது மீன் உற்பத்தி நாடாக உருவெடுத்துள்ளதாகக் கூறிய ஒன்றிய அமைச்சர் ரூபாலா, மீன்வளர்ப்பில் உலகின் இரண்டாவது முன்னணி நாடாகவும் இந்தியா திகழ்வதாக கூறினார்.

மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள், சலுகைகள், மீன் இனப்பெருக்க தொழில்நுட்பம் உள்ளிட்ட ஒன்றிய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, உள்நாட்டு மீன் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாகவும் ஒன்றிய அமைச்சர்  பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

மீன்பிடி உற்பத்தியை அதிகரிப்பது, உற்பத்தித்திறன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, சந்தைப்படுத்தல், ஏற்றுமதி மற்றும் நிறுவன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவது குறித்தும் அமைச்சர் வலியுறுத்தி உரையாற்றினார். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீன் விவசாயிகள், மீனவர்கள் போன்ற பயனாளிகளுடன் கலந்துரையாடிய ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா அவர்களுக்கான கிஷான் கிரெடிட் கார்டு, மீன்பிடி உபகரணங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்தார்.

மேலும் காண்க:

20 % TCS- கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு ஜூலை முதல் ஆப்பு !

English Summary: India's fish production has reached 162.48 lakh tonnes says Minister Rupala
Published on: 20 May 2023, 11:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now