மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 April, 2022 10:24 AM IST
Infectious Disease Starts in Delhi..

கோவிட்-19 நான்காவது அலை பீதிக்கு மத்தியில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 17, 2022) 517 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாயின.

இது முந்தைய நாளை விட 56 அதிகம், பாசிடிவிடி விகிதம், அதாவது பரிசோதனை செய்தவர்களில், தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4.21 சதவீதம் என்று தில்லி சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய தொற்று பாதிப்புகளுடன், தலைநகரின் மொத்த தொற்று எண்ணிக்கை 18,68,550 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 26,160 என்ற அளவில் உள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக தினசரி கோவிட்-19 தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நகரில் சனிக்கிழமை 461 கோவிட் தொற்று பாதிப்புகள் மற்றும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை, டெல்லியில் 366 தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, வியாழக்கிழமை, வழக்குகளின் எண்ணிக்கை 325 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள் காலை நிலவரப்படி, டெல்லி மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்காக 9,662 படுக்கைகள் காலியாக உள்ளன. தலைநகரில் தற்போது 9,156 காலியான கோவிட்-19 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 2,174 ICU படுக்கைகள் உள்ளன. டெல்லி மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்களுடன் கூடிய 1,246 ICU படுக்கைகளும் உள்ளன. தேசிய தலைநகரில் மொத்தம் 964 கோவிட்-19 நோயாளிகள் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய தலைநகரில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) ஏப்ரல் 20 அன்று ஒரு முக்கிய கூட்டத்தை நடத்துகிறது, அதில் மாஸ்குகளின் கட்டாய பயன்பாட்டை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம். தில்லி அரசின் சுகாதாரத் துறை, ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில், பொது இடங்களில் முகமூடி அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய கோவிட் நிலைமை குறித்து விவாதிக்க துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் DDMA கூட்டம் நடைபெற உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும். தேசிய தலைநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும்.

டெல்லியில் கோவிட் -19 வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ள நபர்கள் தாங்களே முன் வந்து பரிசோதிக்க வேண்டும் என்றும், தொற்று பரவுவதை தடுக்க மாஸ்க அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

"அறிகுறிகள் இருக்கும் நபர்கள் பெரும்பாலும் கோவிட்-19 சோதனைக்கு செல்வதில்லை. இப்போது, ​​தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, பாசிட்டிவிட்டி விகிதம் மீண்டும் ஐந்து சதவீதத்திற்கு மேல் இருப்பதால், அறிகுறிகள் இருந்தால் பரிசோதனைக்கு செல்லுமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று LNJP மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க:

தலைநகர் டெல்லியில் அதிர்ச்சி! 5 கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட்ட புதிய அறிகுறி.

இந்தியாவில் சதம் அடித்தது ஒமிக்ரான் தொற்று!

English Summary: Infectious Disease in Delhi: Key meeting Chaired by Deputy Governor!
Published on: 18 April 2022, 10:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now