இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 18 September, 2018 8:46 PM IST

ஸ்ரீமுஷ்ணம்: கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே சேல்விழி கிராமத்தில் விவசாயிகள் சம்பா நெல் நடவு பணிகள் செய்து வருகின்றனர். போதிய மகசூல், லாபம் கிடைக்காததால்  இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிவக்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நெல் நடவில் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். நெல்மணிகளை நாற்றங்காலில் இடாமல் ஜெலட்டின்  கேப்சூல்களில் இட்டு இவர்கள் சாகுபடி செய்துள்ளனர். திருச்சியை சேர்ந்த பொறியாளர் ஒருவர் கேப்சூல் மூலம் பயிர் செய்வதை கண்டறிந்த இவர்கள் இந்த புதிய முறையை பின்பற்றி  நடவு  பணியை செய்ததாக கூறினர்.

ஒவ்வொரு கேப்சூல்களுக்குள்ளும் இரண்டு நெல்மணிகள், இயற்கை முறையில் தயாரான வேப்பங்கொட்டை தூள், எரு, நுண்ணூட்ட சத்து மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை நிரப்பப்பட்டு  நடவு செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய சுமார் 60 ஆயிரம் கேப்சூல்கள் வீதம் தேவைப்படும். நாற்றங்கால் முறைக்கு ஏக்கருக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவைப்படும். கேப்சூல்  முறையில் 2600 கிராம் விதை நெல்லே போதும் என கூறுகிறார்கள். இந்த முறையை பயன்படுத்துவதால் நூற் பூச்சி, வேர் பூச்சி போன்ற நோய்கள் பயிரை தாக்காது என்றும், இம்முறையில் சாகுபடி  செய்யும்போது நேரம், நீர் மிச்சமாவதுடன், விளைச்சல் அதிகமாவதோடு, அதிக நோய் தாக்குதலும் ஏற்படுவதில்லை என இவர்கள் கூறுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் முதன் முதலாக  இப்பகுதியில் கேப்சூல் நடவு முறை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary: Innovation in paddy cultivation: Paddy planting work through kapsul near cuddalore
Published on: 18 September 2018, 08:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now