மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 July, 2019 11:36 AM IST

தமிழகத்தில் நேற்று மாலை வரை 14 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது. அதிக வெப்பச்சலனம் காரணமாக தவித்த மக்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தென்மேற்கு பருவ காற்று தீவிரமடைந்து வருகிறது, இதனால் ஜூலை 6 நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நேற்று மாலை வரை பதிவான வெப்பநிலை அளவின் படி 14 நகரங்களில் 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது. திருத்தணியில் 105 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், சென்னை விமான நிலையம், மதுரை தெற்கு, மதுரை விமான நிலையம், கடலூர் ஆகிய இடங்களில் 104 டிகிரி,  வேலூர், புதுச்சேரி இடங்களில் 102 டிகிரி, காரைக்கால், கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, நாகப்பட்டினம், ஆகிய இடங்களில் 100 டிகிரியும் பதிவாகியுள்ளது.

இதை அடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது 

வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலப்பகுதியை சென்றடைந்து வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக தென்மேற்கு பருவ காற்று தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பாக கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, விருதுநகர், நாகப்பட்டினம், தேனி, நெல்லை,  ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Intensified South West monsoon: expecting heavy rain in Tamil Nadu and Pondicherry
Published on: 05 July 2019, 11:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now