மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 January, 2020 11:49 AM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் உதவித்தொகையுடன் கூடிய கயிறு கைவினைப் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் ஜனவரி 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம் தஞ்சாவூர் உள்ள பிள்ளையார்பட்டி என்ற  இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கயிறு தொழில்நுட்பத்தில் பட்டயப் பயிற்சி அளிக்கப் பட உள்ளது.

பயிற்சி விவரங்கள்

தகுதி : மேல்நிலைத் தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி காலம் :15 மாதங்கள்

உதவித்தொகை : ரூ.3,000

வகுப்பு தொடங்கும் நாள் : பிப்ரவரி 3ம் தேதி

இப்பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் அதற்கான விண்ணப்பப் படிவங்களை நேரிலோ அல்லது தபால்  மூலமோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் வரும் 17ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் முகவரிக்கு, தொலைபேசி எண்ணுக்கும் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.

அலுவலகப் பொறுப்பாளர்,

மண்டல விரிவாக்க மையம்,

பிள்ளையார்பட்டி, வல்லம் வழி,

தஞ்சாவூர் – 613403

04362 – 264655

English Summary: Intensive Training Courses for Coir and Coir products at Tanjore
Published on: 06 January 2020, 11:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now