பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 11 August, 2022 8:54 AM IST
International Wind festival

தமிழக சுற்றுலாத் துறை பங்களிப்புடன் மாமல்லபுரம் கடலோர பகுதியில், சர்வதேச காற்றாடி திருவிழாவை மூன்று நாட்கள் நடக்கிறது. தமிழகத்தில் முதல் முறையாக இப்போட்டி நடைபெறுகிறது என்பதால், அதற்கான ஏற்பாடுகள் படுஜோராக நடக்கின்றன. 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 29 முதல் நேற்று முன்தினம் வரை மாமல்லபுரத்தில் நடந்தது. இப்பகுதியை அறியாத பல வெளிநாட்டவரும், தற்போது அறிந்து வியந்தனர். இப்போது சர்வதேச காற்றாடி திருவிழாவும், மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது.

காற்றாடி திருவிழா (Wind Festival)

குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம், தமிழக சுற்றுலாத் துறையின் பங்களிப்புடன், நாளை மறுநாள் துவங்கி ஆகஸ்ட் 15 வரை, சர்வதேச காற்றாடி திருவிழாவை நடத்துகிறது. சென்னை, பொள்ளாச்சி பகுதிகளில், வெப்ப காற்று பலுான் விழாவை, ஆண்டுதோறும் நடத்தும் நிறுவனம், தமிழகத்தில் முதல்முறையாக, மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழாவை நடத்துகிறது. மாமல்லபுரம் சுற்றுலாப் பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின், திறந்தவெளி வளாக கடற்கரை பகுதியில், இவ்விழா நடக்கிறது.

சர்வதேச காற்றாடி திருவிழாவில் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலே யா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின், 80 காற்றாடி கலைஞர்கள், பிரமாண்ட வண்ண காற்றாடிகள் பறக்க விடுகின்றனர். தமிழக கலாசாரம் கருதி, மாமல்லபுரம் கடற்கரை கோவில், திருவள்ளுவர் உருவம், ரசிகர்களை கவரும் யானை, குதிரை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள், கார்ட்டூன் வடிவங்களில் காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளன.

நுழைவுக்கட்டணம் (Entry Fees)

பாராசூட்டில் பயன்படுத்தும் நைலானில் தயாரிக்கப்பட்ட, 3 அடி முதல் 20 அடி உயரம் காற்றாடிகள் பறக்க விடப்படும். காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். மூன்று நாட்கள் இரவில், அரங்கங்களில் பல்வேறு வகையான வித்தியாசமான உணவு வகைகளை ருசிக்கலாம். பன்னாட்டு இசையை ரசிக்கலாம். பிரமாண்ட காற்றாடி செய்முறை விளக்கம் காணலாம். பெரியவர்களுக்கு, தலா 150 ரூபாய் நுழைவுக்கட்டணம் உண்டு. சிறுவர்களுக்கு இலவசம். விபரங்களுக்கு, www.tnikf.com என்ற இணையதளத்தை காணலாம்.

பறவைகளுக்கு பாதிப்பு

காற்றாடி விழா நடத்த 15 ஏக்கர் திறந்தவெளி இடம், காற்றாடி கலைஞர்கள் தங்க இடம் என, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பங்களிக்கிறது. ரசாயனம், மாஞ்சா கலந்த காற்றாடி பறக்கவிடுவதால், பறவைகள், விலங்கிற்கு பாதிப்பு ஏற்படலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் படிக்க

அதிசய கிணறுகளை இணைக்கும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி.!

இலவசங்களை அளிப்பதால் நாடு தன்னிறைவு பெறாது: பிரதமர் மோடி பேச்சு!

English Summary: International Wind Festival at Mamallapuram: Starts on August 13!
Published on: 11 August 2022, 08:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now