மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 August, 2021 7:59 PM IST
Credit : Dinamalar

உலகமெங்கும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இரண்டாம் அலையின் (Second Wave) தாக்கம் குறைந்து, மூன்றாம் அலையின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவும் திடடத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பி.எம். கேர்ஸ்

கோவிட் பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பி.எம்.கேர்ஸ் (PM Cares) திட்டத்தில் உதவிபெற, இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கோவிட் தொற்றால், பெற்றோர் இருவரையும் அல்லது சட்டப்பூர்வ காப்பாளர்கள் அல்லது தத்தெடுத்த பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம் (ரூ.10 லட்சம்) அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பி.எம்.கேர்ஸ் நிதியை பயன்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மே 29ம் தேதி தொடங்கி வைத்தார்.

இத்திட்டம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முழுமையான அக்கறை அளிக்கவும், குழந்தைகள் நீண்ட காலம் பாதுகாப்பு பெறவும், உடல் நலத்தை காக்க மருத்துவக்காப்பீடு (Medical Insurance) வசதி பெறவும், கல்வி பெறவும் அவர்களது 23வது வயது வரை உதவுகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவிபெற https://pmcaresforchildren.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் படிக்க

100% மக்களுக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரமானது புவனேஷ்வர்!

எச்சரிக்கை: அக்டோபரில் உச்சம் அடைகிறது கொரோனா 3வது அலை

English Summary: Introducing the website to get help for children who have lost their parents in corona
Published on: 03 August 2021, 07:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now