நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 September, 2022 7:16 PM IST
Invest Money

பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் சிறு முதலீட்டாளர்களுக்கு வரப் பிரசாதமாக திகழ்கிறது. பாதுகாப்பான இடர்பாடுகள் இல்லாத முதலீடு, வரி விலக்கு என பிபிஎஃப் என்னும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் தற்போது 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. திட்டத்தில் வட்டி மாதாந்திர விகிதத்தில் கணக்கிடப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்கள் பிபிஎஃப் கணக்கில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் வரை தங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.
 
இருப்பினும், ஒருவருக்கு 15 வருட முடிவில் பணம் தேவையில்லை என்றால், அவர் PPF கணக்கின் காலத்தை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்ளலாம். PPF கணக்கு நீட்டிப்பு படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் ஐந்து வருடம் ஐந்து வருடமாக இதைச் செய்யலாம்.

தினமும் ரூ.417 முதலீடு செய்யுங்கள், ரூ 1 கோடி வருமானம் பெறுங்கள்:

  • PPF திட்டத்தில் முதலீட்டாளர்கள் முறையாக முதலீடு செய்தால் ரூ.1 கோடி ரூபாய் வரை குவிக்க முடியும். இதற்கு முதலீட்டாளர்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும்.
  • உங்கள் PPF கணக்கில் ஒரு நாளைக்கு 417 ரூபாய் முதலீடு செய்தால், மாத முதலீட்டு சுமார் 12,500 ரூபாயாக இருக்கும். அதாவது, ஒரு வருடத்திற்கு, உங்கள் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் ரூ. 1,50,00 க்கும் சற்று அதிகமாக முதலீடு செய்வீர்கள். இது அதிகபட்ச வரம்பாகும்.
  • அந்த வகையில், 15 ஆண்டுகளில், திரட்டப்பட்ட மொத்தத் தொகை ரூ. 40.58 லட்சமாக இருக்கும், அதன்பிறகு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இரண்டு முறை முதிர்சிக்காலத்தை நீட்டிக்க வேண்டும்.
  • இதை 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து செய்து வந்தால், முதிர்வு காலத்தில் உங்களுக்குக் கிடைக்கும் தொகை ரூ.1.03 கோடியாக இருக்கும்.
  • இந்தத் தொகை முற்றிலும் வரி விலக்கு ஆகும். மேலும், மொத்த வட்டி கிட்டத்தட்ட 66 லட்சமாக இருக்கும். 25 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்திருக்கும் மொத்தத் தொகை ரூ.37 லட்சமாக இருக்கும்.
மேலும் படிக்க: 
English Summary: Invest Rs 417 and get a chance to get Rs 1 crore, don't miss it?
Published on: 09 September 2022, 07:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now