அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 July, 2022 7:03 PM IST
IRCTC

இந்திய ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு விதிகள்: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்து, டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நபராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்திய ரயில்வே அவ்வப்போது தனது விதிகளில் பல மாற்றங்களை செய்கிறது. இது குறித்த தகவல்களும் பயணிகளுக்கு அளிக்கப்படுகின்றன. ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. புதிய விதியின்படி, டிக்கெட் முன்பதிவு செய்ய உங்கள் கணக்கை வெரிஃபை செய்ய வேண்டும்.

மொபைல் மற்றும் மின்னஞ்சல் சரிபார்ப்பு அவசியம்

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசியின் விதிகளின்படி, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், பயனர்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டியது அவசியமாகும். மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் சரிபார்ப்பு இல்லாமல், ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.

புதிய விதியை அமல்படுத்த காரணம் என்ன?

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யாத ஐஆர்சிடிசி கணக்கின் பயனர்கள் பலர் உள்ளனர். அத்தகையவர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். நீங்களும் நீண்ட நாட்களாக இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றால், முதலில் சரிபார்ப்பு செய்ய வேண்டியது அவசியமாகும். அதன் செயல்முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒரு கணக்கில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்

ஐஆர்சிடிசியின் ஒரு யூசர் ஐடியில் ஒரு மாதத்தில் அதிகபட்ச டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வரம்பு 12ல் இருந்து 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது ரயில்வே பயணிகளுக்கான மற்றொரு பெரிய செய்தியாகும். ஆம், இப்போது நீங்கள் ஆதார் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். முன்னதாக இந்த எண்ணிக்கை 12 ஆக இருந்தது. அதேபோல், ஆதார் இணைக்கப்படாத கணக்கில் இருந்து 6 டிக்கெட்டுகளுக்கு பதிலாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க

Cow Urine Price: பசுவின் கோமியத்தை வாங்கும் மாநில அரசு! விலை என்ன தெரியுமா?

English Summary: IRCTC: Indian Railways changed ticket booking rules
Published on: 28 July 2022, 07:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now