மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 September, 2021 9:07 AM IST

சேலம் மாவட்டத்தில் கொரொனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சக்கட்ட பாதிப்பு (Peak vulnerability)

கடந்த இரண்டு வருடங்களாக நம்மைப் பெரும் அவதிக்கு ஆளாக்கி வரும் கொரோனா தொற்றுப் பரவலால், உச்சக்கட்ட பாதிப்பை சந்தித்து வருகிறோம்.
குறிப்பாக நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும், வாழ்வாதாரத்தையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா முதல் அலையை விட 2ம் அலை மோசமான விளைவுகளை ஏற்படுத்திய நிலையில், அதன் வீரியம் குறைந்த வருவதாக நம்பப்படுகிறது.
3-ம் அலை குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அனைவருமே அச்சத்தில் உச்சத்தில் இருக்கிறோம்.

தடுப்பூசி உருவில் (In the form of a vaccine)

இந்தியாவில் கொரொனா 2 வது அலை வேகமாகப் பரவி வரும்நிலையில், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இதனிடையே சேலம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கூடும் கூட்டத்தால் கொரொனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் கொரொனா தடுப்பூசி போட்டால் மட்டும்தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

புதிய கெடுபிடி (The new nuisance)

சேலம் மாவட்ட நுகர்பொருள் வழங்கல் துறையின் இந்த உத்தரவு, பொதுமக்களின் தலையில் இடியாக விழுந்துள்ளது. இருப்பினும், இந்த மாவட்டத்தில் இந்த யுக்திக்கு நல்லப் பலன் கிடைக்கும் பட்சத்தில், அனைத்து மாவட்டங்களிலும், ரேஷன் பொருட்களை வாங்க வருவோர், கொரோனாத் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்ற நிலையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதன்மூலம் இனிமேல் இவர்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருட்கள் என்பது உறுதியாகியுள்ளது. 

மேலும் படிக்க...

தமிழகத்தில் ஒரே நாளில் 28 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை

கொரோனா வைரஸ் தொற்றால் நினைவாற்றல் பாதிக்கப்பட வாய்ப்புண்டா?

English Summary: Is there a coronavirus vaccine? No ration!
Published on: 15 September 2021, 09:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now