மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 July, 2019 11:39 AM IST

இந்நிலையில் விண்ணில் ஏவுவதற்கு சில மணி நேரத்திற்கு  முன்பாக ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரிந்தது. இதன் காரணமாக கடைசி நிமிடத்தில் விண்கலம் ஏவப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கோளாறுகள் சரி செய்யப்பட்டு  இன்று பிற்பகல் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலம்  மதியம் 2:43 மணி நேரத்தில் விண்ணில் செலுத்தப்படுகிறது. மேலும் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இதற்கான 20 மணி நேர கவுன்டவுன் நேற்று தொடங்கியது..

கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவை ஆயுவு செய்ய இஸ்ரோ சந்திராயன் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 312 நாட்கள் நிலவை சுற்றிவந்து ஆய்வு நடத்தியது. அப்போது பனிக்கட்டி வடிவில் நிலவும் மேற்பரப்பில் நீர் இருப்பதை உறுதி செய்தது. மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான் உள்ளிட்ட தாதுக்கள் நிலவின் பரப்பில் படிமங்களாக இருப்பதை கண்டறிந்து அதனை படமாக எடுத்து ஆதாரமாக அனுப்பியது.

மேலும் ரூ 386 கோடி மட்டுமே இத்திட்டத்திற்கு செலவானதால் இந்தியா மற்ற உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த வெற்றியைத்  தொடர்ந்து நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் இந்திய புதிய இலக்குடன் சந்திராயன்-2 விண்கலத்தை செயல் படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. மேலும் இத்திட்டத்திற்காக  ரூ 604  கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன்  இந்த சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

K.Sakthipriya
Krishi Jagran 

English Summary: ISRO'S Chandrayan-2 mission to the moon launching today at 2:51 pm
Published on: 22 July 2019, 11:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now