மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 July, 2021 11:58 AM IST
Helmet Mandatory

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகர், புறநகர், குன்னூர், தேவாலா, கூடலூர் என 5 பெரிய இடங்கள் உள்ளன. அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளில் கடந்த 2019-ஆம் ஆண்டு 42 இருசக்கர வாகன விபத்துகளும், 2020-ஆம் ஆண்டு 42 விபத்துகளும், 2021ஆம் ஆண்டு 26 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன.

இதில் 2019ஆம் ஆண்டு 8 பேரும்,  2020-ஆம் ஆண்டு 5 பேரும், நடப்பாண்டில் 8 பேரும் இறந்துள்ளனர். மேலும் ஆண்டுக்கு 50, 49, 20 பேர் என கை, கால்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட விபத்துகளில் உயிரிழப்புக்கு காரணம் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் எப்போதும் ஹெல்மெட் அணியாமல் இருப்பது தான் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டஒழுங்கின்படி அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை அலட்சியம் காட்டி பயணம் செய்வதால் விபத்துகளில் உயிரிழப்புகளும், கை, கால் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. வாகன விபத்துகளில் இறப்புகள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்டதால் மட்டுமே நிகழ்ந்துள்ளாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

எனவே இதை தவிர்க்கும் பொருட்டு நீலகிரி மாவட்ட காவல்துறை மூலம் வருகிற ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் என்று  இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் சரியான முறையில் லாக் செய்து அணிய வேண்டும் . ஹெல்மெட் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை காவல்துறை மற்றும் இதர அரசு ஊழியர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் இதுவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.

ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் பொதுமக்கள், காவல்துறை மற்றும் அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - ஷிப்ட் முறையில் நடத்துவது குறித்து அரசு பரிசீலனை!

இயந்திரம் மூலம் நெல் நடவு: கடனுதவியில் இயந்திரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஜூலை 20 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!!

English Summary: It is mandatory to wear a helmet from August 1st !!
Published on: 14 July 2021, 10:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now