நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 November, 2022 5:25 PM IST
Investments

உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும், பொருளாதார கடினமான நேரங்கள் அல்லது அவசரநிலைகளுக்குத் தயாராக இருப்பதற்கும் முதலீடுகள் சிறந்த உத்தியாகும். எனினும் அதிக பிரீமியங்கள் காரணமாக பலர் இன்னும் முதலீடு செய்வதில்லை. ஆனால் இன்று, சராசரி வருமானம் உள்ள மக்கள் கூட, சிறிய பிரீமியங்கள் கொண்ட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

கிராம சுமங்கல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்

இவர்களுக்கு கிராம சுமங்கல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்றழைக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டம் வரபிரசாதமாகும். பாதுகாப்போடு எதிர்கால சேமிப்புக்கும் வழிவகுக்கும்.
இந்தத் திட்டத்தின் ரிட்டர்ன், வட்டி விகிதம், முதிர்வு காலம், தகுதிக்கான அளவுகோல்கள், முதலீடுகளின் நடைமுறைகள் உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

ரூ.10 லட்சம் காப்பீடு

19 முதல் 45 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் இத்திட்டத்தில் இருந்து பயன் பெறலாம். மேலும், இந்தத் திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் காப்பீடும் வழங்கப்படுகிறது.
பாலிசிதாரர் துரதிருஷ்டவசமாக காலஞ்சென்றால், காப்பீட்டுத் தொகை சட்டப்பூர்வ வாரிசு அல்லது நாமினி அல்லது குடும்ப உறுப்பினருக்கு வரவு வைக்கப்படும்.

கால அளவு

இந்தத் திட்டத்தில் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என இரண்டுவகை கால அளவுகள் உள்ளன. 15 வருட பாலிசியில் 6, 9 மற்றும் 12 ஆண்டுகள் முடிவடைந்தவுடன், மொத்த உத்திரவாதத்தில் 20-20 சதவீதம் பணம் திரும்பப் பெறப்படும்.
கூடுதலாக, 20 வருட பாலிசி 8, 12 மற்றும் 16 வருடங்களின் முடிவில் பணத்தைத் திரும்பப் பெறுகிறது. மீதமுள்ள 40 சதவீதத்திற்கு முதிர்வுக்கான போனஸ் கிடைக்கும்.

பிரீமியம், ரிட்டன்

நீங்கள் 25 வயதில் 7 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையுடன் 20 வருட பாலிசி எடுத்தால், ஒவ்வொரு நாளும் ரூ.95 பிரீமியமாகச் செலுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ. 2850 வீதம் 12 மாதத்துக்கு (1 ஆண்டு) ரூ.17,100 செலுத்த வேண்டும்.
20 ஆண்டு பாலிசி முதிர்வுக்கு பின்னர் 14 லட்சம் கிடைக்கும். மேலும், 20 வருட பாலிசியில் ரூ. 7 லட்சம், மேற்கூறிய 8வது, 12வது மற்றும் 16வது ஆண்டுகளில் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 20 சதவீதத்தைப் பெறுவீர்கள்.

மூன்று தவணைகளுக்குப் பிறகு, செலவு மொத்தம் ரூ. 4.2 லட்சம் (ரூ. 7 லட்சத்தில் 20 சதவீதம் ரூ. 1.4 லட்சம்). இதைத் தொடர்ந்து, 20வது ஆண்டில் நீங்கள் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரத்தை பெறுவீர்கள், இது வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையை நிறைவு செய்யும்.
அதைத் தொடர்ந்து, ஆண்டுக்கு 1,000 ரூபாய்க்கு 48 ரூபாய் போனஸாகப் பெறுவீர்கள். இந்தத் தொகை 20 ஆண்டுகளில் ரூ.6.72 லட்சமாக இருக்கும்.

மேலும் படிக்க:

திருப்பதி கோவில் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மாணவிகளுக்கு சைக்கிள், ஸ்கூட்டர் வழங்கப்படும்

English Summary: its easy to become a millionaire, Rs. 2 thousand per month is enough!
Published on: 07 November 2022, 05:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now