மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 July, 2021 9:19 AM IST
Tamil Nadu Secretariat

புதிதாக தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தாக்கம் இருந்து வருகிறது. இது பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சிறிய, பெரிய நிறுவனங்கள், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் என்ற எந்த ஒரு வேறுபாடுகளும் இல்லை. ஒட்டுமொத்தமாக தொழிற்துறையை கொரோனா ஆட்டிப்படைத்து விட்டது.

தமிழக அரசு உத்தரவு

இந்த இழப்பிலிருந்து மீண்டு வர தொழில் நிறுவனங்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே ஒவ்வொரு முறையும் புதிய தளர்வுகள் அறிவிக்கும் போதும், சிறு குறு தொழில் நிறுவனங்களை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்து உத்தரவு பிறப்பித்து வருகிறது. இதன் காரணமாக பொருளாதார இழப்புகளில் இருந்து சிறு குறு தொழில் நிறுவனங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன.

தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள்

இந்த சூழ்நிலையில் தொழில் நிறுவனங்களின் பாதிப்பை மேலும் சரிசெய்யும் வகையில் மேலும் தளர்வுகள் மற்றும் புதிய சலுகைகளை மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய உத்தரவின் படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் 30 லட்ச ரூபாய்க்கும் குறைவான டெண்டரில் சிறு குறு நிறுவனங்கள் பங்கேற்கும் போது அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளன.

டெண்டர் தொகை தேவையில்லை

டெண்டருக்கான தொகை செலுத்த  அவசியம் இல்லை. குறிப்பாக தமிழக அரசின் 'STARTUP TN' முகமையில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு புதிதாக தொழில் தொடங்கும் சிறு குறு நிறுவனங்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

மேலும் படிக்க:

100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் விரைவில் உயர்த்தப்படும்- தமிழக அரசு அறிவிப்பு!

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் பதிவிறக்கம்:

 

English Summary: JACKPOT: New offer from the Tamil Nadu government
Published on: 24 July 2021, 09:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now