News

Monday, 26 September 2022 07:29 PM , by: T. Vigneshwaran

Loan Waiver

5 சவரனுக்கு உட்பட்டு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்கள் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தற்போது வரை 5,22,514 விவசாயிகளுக்கு ரூ. 3,969 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சுமார் 1 லட்சம் பேர், 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்து தற்போது வரை நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்காததால் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் கூறினார். அவர்கள் உறுதிமொழி பத்திரத்தை சமர்பிக்கும் பட்சத்தில் அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னை அண்ணாநகர், திருமங்கலம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 நியாயவிலை கடைகள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் வடகிழக்கு பருவ மழை காரணமாக காய்கறி விலை உயர்வு ஏற்பட்டால், பசுமை பண்ணை காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்தார்.

மேலும் படிக்க:

5 ரூபாய்க்கு 5 விதமான உணவுகள், எங்கே தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)