News

Wednesday, 27 October 2021 08:06 PM , by: R. Balakrishnan

Job Opportunity

இந்தியாவில் முதன் முறையாக ‘திறன் தாக்கப் பத்திரம்’ என்ற திட்டத்தை தேசிய திறன் வளர்ச்சி கழகமான –என்.எஸ்.டி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.

இலக்கு

இது குறித்து என்.எஸ்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரிட்டன் இளவரசர் சார்லசின் அறக்கட்டளை உள்ளிட்ட சர்வதேச நிதியங்களின் கூட்டுறவுடன் 105 கோடி ரூபாய் முதலீட்டில், இந்தியாவில் முதன் முறையாக ‘திறன் தாக்கப் பத்திரம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு திறன் பயற்சி அளித்து வேலைவாய்ப்பு (Job) வழங்கப்படும். இதற்காக இலக்கு நிர்ணயிக்கப் படும்.இந்த இலக்கை எட்டினால் மட்டுமே, இத்திட்டத்தில் முதலீடு செய்த தனியார் நிறுவனங்களுக்கு, அவை முதலீட்டு செய்த தொகையுடன் ஊக்கத் தொகையை என்.எஸ்.டி.சி., வழங்கும்.

சிறப்பான பயிற்சி

இதனால் தனியார் நிறுவனங்கள் மிகுந்த அக்கறையுடன், வேலைவாய்ப்புள்ள துறைகளில் இளைஞர்களுக்கு சிறப்பான பயிற்சி (Training) அளிக்கும். இதன் வாயிலாக அடுத்த நான்கு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்கள் பயன் பெறுவர் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

குழந்தைகளுக்கு ஆர்கானிக் துணி வகைகள்!

பூட்டிய வீடுகளை கண்காணிக்க மொபைல் ஆப்: கோவையில் அறிமுகம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)