News

Tuesday, 18 October 2022 06:12 PM , by: T. Vigneshwaran

Ration shops

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணிடங்கள் தொடர்பாக, விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 146 விற்பனையாளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது.

அதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https//www.vnrdrb.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதார ர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி? என்பது போன்ற விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியிலும், https://youtube/G6c5e2ELJD8என்ற யூடியூப் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையிடம் மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்த தேவையான செலான்களை மேற்காண்ட இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே உரம்’ திட்டம் தொடங்கினார் பிரதமர்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)