மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 June, 2022 7:05 AM IST
Continuous rain

தேவதானப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்கள் தொடர் மழை காரணமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பி வருகிறது.

தொடர் மழை (Continuous Rain)

மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து வராகநதி ஆற்றுக்கு வரும் கும்பக்கரை உள்ளிட்ட மற்ற வழித்தட ஆற்றில் தண்ணீர் சீராக வந்து கொண்டிருக்கிறது. இதனால் வராகநதி ஆற்றில் சீராக தண்ணீர் வந்து, வடுகபட்டி அருகே உள்ள ராஜவாய்க்கால் மூலம் பிரிந்து நல்லகருப்பன்பட்டி நாரணன்குளம் கண்மாய், சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் ஆகிய கண்மாய்களுக்கு சீரான நீர்வரத்து உள்ளது.

தொடர்மழை காரணமாக கண்மாய்கள் நிறைந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர் மழையால், இந்த ஆண்டு பயிர்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதால், விளைச்சல் நன்றாக இருக்கும்.

இனி வரும் நாட்களில், மழையளவு அதிகரித்தால் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு செயல்படுவதும் அவசியமாகும். பயிர்களுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி, அதிகளவு தண்ணீரில் இருந்து பாதுகாப்பதும் அவசியம்.

மேலும் படிக்க

இரசாயன ஸ்பிரே மூலம் பழுக்க வைக்கப்படும் வாழைப் பழங்கள்: உடலுக்கு கேடு!

குப்பையில் இருந்து உரம்: விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களுக்கு செயல் விளக்கம்!

English Summary: Kanmay filled with continuous rain: Farmers in joy!
Published on: 27 June 2022, 07:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now