மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 February, 2022 9:59 AM IST
Kosk as an alternative to the mask

தென் கொரியாவில் கொரோனாவிலிருந்து தப்பிக்க வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியிலிருந்து பரவிய கொரோனா, கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உலகில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் வந்துவிட்டாலும் காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று அதன் வேற்றுருக்கள் அடுத்தடுத்து தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மாஸ்க் (Mask)

கொரோனாவிலிருந்து நம்மை முழுவதுமாக காப்பது முகக்கவசமும், தடுப்பூசியும் தான் என்று மருத்துவ வல்லுனர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மக்களிடம் மாஸ்க் அணியும் பழக்கமும் அதிகரித்து வருவது ஆரோக்கியமான செய்தி.

மாஸ்க்கு பதில் கோஸ்க் (Kosk as an alternative to the mask)

தென்கொரியாவில் அட்மன் என்ற நிறுவனம் புதிய விதமான முகக் கவசத்தை மக்களிடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முகக் கவசம் வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் தன்மை உடையது. இதனால் சாப்பிடுவதற்கு, தண்ணீர் அருவதற்கும் மாஸ்கை அடிக்கடி கழட்ட வேண்டியதில்லை. கொரிய மொழியில் கோ என்றால் மூக்கை குறிக்கும் அதனால் இந்த முகக்கவசத்தை கோஸ்க் என்று அழைக்கின்றனர். மூக்கின் வழியாகவே கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது இந்த கோஸ்க் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தென் கொரியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. வியாழக்கிழமை 22,907 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடான தென்கொரியா கொரோனாவை இன்றுவரை சிறப்பாகவே கையாண்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு தென்கொரியாவில் 6,812 பேர்வரை பலியாகி உள்ளனர்.

மேலும் படிக்க

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்: சுகாதாரத்துறை அறிவிப்பு!

ஆய்வில் அதிர்ச்சி தகவல்: ஒமைக்ரானை விட வேகமாக பரவும் பி.ஏ., - 2 வைரஸ்!

English Summary: Kosk as an alternative to the mask: Introduced in South Korea!
Published on: 05 February 2022, 09:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now