News

Sunday, 30 May 2021 10:59 AM , by: Daisy Rose Mary

Credit : Dinamani

கோடை உழவை மேற்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகள் வேளாண் உபகரணங்களை வாடகையின்றி பெறலாம் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

வேளாண் துறைக்கு விலக்கு

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கோடை உழவு செய்திட வேளாண் உபகரணங்கள் வாடகையின்றி வழங்கப் படுகின்றன.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் விவசாயிகளின் நலன் கருதி விவசாய பொருட்கள் கொள்முதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான வேளாண்மை இயந்திரம் புழக்கம் ஆகியவற்றுக்கு விலக்க அளிக்கப்பட்டுள்ளது.

வாடகையின்றி வேளாண் உபகரணங்கள்

விவசாயிகளுக்கு உதவும் வகையில் டாபே நிறுவனத்தின் ஜெ பார்ம் சர்வீஸ், தமிழக அரசுடன் இணைந்து வேளாண்மை இயந்திரங்கள் 2 மாதங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு அனைத்து வேளாண் பணிகளுக்கும் வாடகையின்றி வழங்கப்படுகிறது.

எனவே, வேளாண் கருவிகள் தேவைப்படும் சிறு, குறு விவசாயிகள் உழவன் செயலி மூலமாவே நிறுவன சேவை மையத்தை 1800 420 0100 என்ற இலவச செல்போன் எண்ணிலோ, கிருஷ்ணகிரி மாவட்ட கள ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் - 99943 44142 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் வாடகை திட்டம் - டஃபே நிறுவனம் அறிமுகம்!!

வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)