மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 June, 2021 8:47 AM IST

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நுண்ணீர் பாசன வசதிகள்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கிருஷ்ணகிரி வட்டாரத்தில் இந்த ஆண்டு துவரை, பச்சை பயிறு, உளுந்து, காராமணி, நிலக்கடலை, தென்னை ஆகியவற்றை பயிர் செய்ய அரசு மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்தூவுவான் ஆகிய நுண்ணீர் பாசன வசதிகள் செய்து தரப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் நீரின் பயன்பாடு 100 சதவீதம் பயிரின் வேர் அருகே கொண்டு சேர்க்கப்படுகிறது. இதனால் ஆவியாதல் மற்றும் நீர்க்கசிவு இன்றி பாசனம் செய்யப்படுவதால் குறைந்த நீரில் அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்ய முடியும்.

100 சதவீத மானியம்

நுண்ணீர் பாசன மானியத்திற்கு மத்திய அரசு 60 சதவீத நிதியும், மாநில அரசு 40 சதவீத நிதியும் ஒதுக்கியுள்ளன. இதன்மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு எக்டருக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு ரூபாய் ஒரு லட்சமும், தெளிப்பு நீர் பாசனத்துக்கு ரூ.19 ஆயிரத்து 500-ம், மழைத்தூவுவான் பாசனத்துக்கு ரூ.31 ஆயிரத்து 600-ம் மானியம் வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்

இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்களது போட்டோ, விவசாய நிலத்தில் சிட்டா, அடங்கல், வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று, ஆதார் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை, கிணறு அல்லது ஆழ்துளை கிணற்றுக்கான சான்று, மண் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வு முடிவு சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களுக்கு வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைப்பேசி மூலம் வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகள் : உதவி எண்கள் அறிவிப்பு!!

வேளாண் சார்ந்த ஆலோசனைகளை வீட்டில் இருந்து தொலைபேசி மூலம் பெறலாம் - வேளாண் துறை தகவல்!!

வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!

English Summary: Krishnagiri Farmers can apply for 100 percent subsidy for micro-irrigation says department of agriculture
Published on: 03 June 2021, 08:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now