சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 May, 2021 2:13 PM IST

மாங்கனிக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட மாங்கனி விவசாயிகள் தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்

கிருஷ்ணகிரி மாவட்ட மாங்கனி விவசாயிகள் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் செளந்தர்ராஜன் தமிழக அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மாங்கனிகளுக்கு உரிய விலை மாங்கூழ் தொழிற்சாலை நிறுவனத்தினா் வழங்குவதில்லை.

ஒரு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்து, இயற்கை இடா்பாடுகளுக்கு இடையில் மா மகசூலை விவசாயிகள் பெறுகின்றனா். கடந்த ஆண்டு மா மகசூல் நன்றாக இருந்தது. தோத்தாபுரி மாங்காய் ஒரு டன் ரூ. 25 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்தனா். ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 சதவீதத்துக்கும் குறைவாகவே மகசூல் உள்ள நிலையில், டன் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் விலை கிடைக்க வேண்டும். ஆனால், தற்போது கரோனா பொது முடக்கத்தை பயன்படுத்தி மாங்கூழ் தொழிற்சாலை நிறுவனத்தினா் மா விவசாயிகளை ஏமாற்றக் கூடாது.

பொது முடக்க நேரத்தில் அதிகாரிகளையும், ஆட்சியாளா்களையும் சந்திக்க முடியாத சூழலை சாதமாக பயன்படுத்திக்கொள்வது வேதனையாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் துறையினா் மா விவசாயிகளின் அவல நிலையைப் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை

எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கேற்ற நியாயமான விலை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மா விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

குறுவை சாகுபடிக்குத் தயாரா?- மானிய விலையில் இடுபொருட்கள் !

வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!

மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!

English Summary: Krishnagiri farmers demands Govt to give a fair price for Mangos
Published on: 20 May 2021, 01:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now