News

Wednesday, 15 June 2022 07:41 PM , by: R. Balakrishnan

Cultivation of paddy

குறுவை பருவ நெல் சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 1.62 இலட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம், குறுவை பருவ நெல் சாகுபடி தொடங்கும். இதற்காக, சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து, அதே மாதம் 12ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

குறுவை நெல் சாகுபடி (Kuruvai Paddy Cultivation)

நடப்பாண்டில், அணையில் போதுமான நீர் இருந்தது. கர்நாடகாவில் பெய்த மழையால், அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்தது. ஆகவே, மே 24 ஆம் தேதி, முன்கூட்டியே பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.

கடைமடை பகுதிகள் வரை நீர் சென்று சேர்வதற்காக, 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர் வழித்தடங்கள் துார்வாரப்பட்டன. இதனால், சாகுபடி பரப்பு நான்கு இலட்சம் ஏக்கரைத் தாண்டும் என, வேளாண் துறையினர் கணக்கு போட்டுள்ளனர்.

இதுவரை 1.62 லட்சம் ஏக்கரில் மட்டுமே, சாகுபடி துவங்கியுள்ளது. இம்மாத இறுதி வரை நடவு மற்றும் நேரடி நெல் விதைப்புக்கு கால அவகாசம் உள்ளது. எனவே, அதற்குள் சாகுபடி இலக்கு பூர்த்தியாகும் என, வேளாண் துறையினர் நம்புகின்றனர்.

மேலும் படிக்க

கருஞ்சீரகத்தின் அளப்பரிய மருத்துவப் பயன்கள் இதோ!

தொடர் வருமானத்திற்கு கோவைக்காய் விவசாயத்தை உடனே தொடங்குங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)