News

Monday, 08 April 2019 05:10 PM

 சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ஆதரித்து ஒரு தரப்பினரும், எதிர்த்து மற்றொரு தரப்பினரும் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பானது அனைத்து துறையினரையும்  மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 கடத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த 8  வழி சாலைகளுக்கான வரைவு தயாரிக்க பட்டது. இத்திட்டம் அறிவிக்க பட்டதிலிருந்து விவசாகிகள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் என் பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருந்தனர்.

  மத்திய, மாநில அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்தனர். இதனால் இந்த திட்டத்தை பற்றி தேசிய அளவில் விவாதித்தனர். இந்த திட்டத்தை எதிர்த்து, பிற விவசாயிகளுடன், பாமக-வும் வழக்குத் தொடர்ந்திருந்தது. நீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ளது.

நீதிமன்ற தடை

வழக்கினை விசாரித்த நீதிபதிகள், சில கருத்துக்களை முன் வைத்து இதற்கு தடை விதித்தது.

  • திட்டம் தொடர்பான கள ஆய்வுகளை மத்திய அரசோ, மாநில அரசோ செய்யவில்லை.

  • சாலை அமைக்கும் முன் அடிப்படையில் கவனிக்க வேண்டிய வன ஆய்வு, சுற்றுசூழல் ஆய்வு, வீடுகளின் ஆய்வு, மக்களின் கருத்து, என்று எதையும் செய்யவில்லை.

  • திட்டத்தை அறிவித்த அன்றே முன் அறிவிப்புகள் இன்றி பல மரங்களை வெட்டியுள்ளார். 

இதனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும்,  கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது,

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)