மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 September, 2019 11:37 AM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் மழை பெய்ய வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக குமரிக்கடலில்  நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஓரு சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் தமிழகத்தின்  தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கன மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேபோன்று டெல்டா மாவட்டங்களிலும் வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

குமரிக்கடலில் மையம் கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றானது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்கு  செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், மிதமான முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக கூடும் என கூறப்பட்டுள்ளது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Latest Weather Report: Chennai Meteorological Department forecast the Southwest Monsoon may continue
Published on: 30 September 2019, 11:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now