News

Friday, 15 July 2022 08:54 PM , by: R. Balakrishnan

India's first rocket engine plant

விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான அனிகுல் காஸ்மோஸ் (Agnikul Cosmos) சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தனது ராக்கெட் இஞ்சின் ஆலையை சென்னையில் தொடங்கியுள்ளது.

ராக்கெட் இஞ்சின் ஆலை (Rocket Engine Plant)

காஸ்மோஸ் நிறுவனம் தொடங்கவுள்ள ஆலையானது, இந்தியாவின் முதல் 3டி பிரிண்டட் (3D Printed) ராக்கெட் இஞ்சின் ஆலையாகும். ராக்கெட் ஃபேக்டரி 1 (Rocket Factory 1) என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஆலையை டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் திறந்து வைத்தார். அவருடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் 10,000 சதுர அடியில் இந்த ராக்கெட் இஞ்சின் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் 400mm x 400mm x 400mm 3D பிரிண்டர் உள்ளது. இந்த ஆலையில் ராக்கெட் இஞ்சின் முழுவதுமாக உற்பத்தி செய்யப்படும்.

ஒரு வாரத்துக்கு இரண்டு ராக்கெட் இஞ்சின்களை இந்த ஆலையில் உற்பத்தி செய்ய முடியும் என அக்னிகுல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறுகிறார். இந்த ஆலையில் 30 முதல் 35 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க

உதவாத பிளாஸ்டிக்கில் ஆயில் தயாரிப்பு: அசத்தலான கண்டுபிடிப்பு!

சாலை விபத்துகளை தடுக்க புதிய டெக்னாலஜி அறிமுகம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)